உணர்கிறேன்!!சப்தங்கள் மறையும் இடத்தில்
நிசப்தங்கள்தொடங்கும் புள்ளியில்
இருத்தலின் அடையாளங்களில்
இல்லாதவற்றின் இருத்தல்களில்
முடிவுகள் எனும் மாற்றங்களில்
தொடக்கம் எனும் உருவகங்களில்
ஒளியின் எல்லையில்
இருளின் முடிவில்
துன்பத்தின் இறுதியில்
இன்பத்தின் ஆரம்பத்தில்
எத்தனை கோடி இன்பங்களில்
அத்தனை கோடி துன்பங்களில்
இன்னும் எத்தனையோ உருவகங்களில்
உணர்வுகளில் உணர்ந்ததை உணர்த்த முடியாது-எனும்
உணர்வுகளோடு உணர்கிறேன்...
இறைவனின் இருத்தலை.... உணர்கிறேன்....